“லக்பதி திதி யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் அரசு 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் உதவி வழங்குகிறது.

இத்திட்டத்தில் கீழ் பயன்பெற, பெண்கள் ஏதேனும் ஒரு மகளிர் சுயஉதவிக் குழுவில் சேர வேண்டியது அவசியம்.

மேலும் சுயஉதவிக் குழுவில் சேர்ந்த பிறகு, பெண்கள் தங்களுக்குக்கான வணிகத் திட்டத்தை உருவாக்கி சுயஉதவிக் குழு மூலம் அந்த தொழில் திட்டத்தை அரசு அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.

இதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலித்த பின், விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

இதன் மூலம் பெண்கள் தொழில் தொடங்கி தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி சுதந்திரமான முறையில் செயல்பட முடியும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.